இல்லச் சிறார்களதுகல்விச்சுற்றுலா இந்த மாதம் மயிலாம்பாவெளி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்,உன்னிச்சைகுளம் என்பவற்றுக்கு எற்பாடு செய்யப்பட்டு இனிதே நடைபெற்றது. இந்த மகிழ்ச்சிகரமான சுற்றுலாவின் இல்லச்சிறார்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நிருவாக உறுப்பினர்கள், இல்லப்பாதுகாவலர் போன்றோர் பங்கேற்றனர்.மேலும் மாணவர்களது போஷாக்கினை பேணும் பொருட்டு இந்த சுற்றுலாவின்போது போஷாக்கான மாமிஷா உணவுகள் மிகவும் ருசியான வகையில் சமைத்து வழங்கப்பட்டது. இதன்போது மாணவர்களும் இல்லத்தில் சேவை செய்யும் ஊழியர்களும் மிகவும் மனம் மகிழ்வுடன் காணப்பட்டனர். இந்த சுற்றுலாவிட்கான முழுச் செலவினையும் இலண்டனில் உள்ள ஜெயானந்தன் என்பவர் தனது மகனான காருன்யனின் இறைபதமடைந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >