நிகழ்வுகள்


இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2016/05/12

posted May 20, 2016, 2:57 AM by Uthayarajan Markandu   [ updated May 20, 2016, 3:00 AM ]

இலண்டனை சேர்ந்த திரு; ஜெயானந்தன் என்பவர் தனது மகனான காரூணியன் என்பவரின் இறந்த தினத்தை முன்னிட்டு 2016.05.12 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்குவதற்கு பண உதவி வழங்கினார் . அன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கப்பட்டது . இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை  இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.





இல்ல சிறார்களுக்கான உணவு வழங்கல்- 2015/12/13

posted Dec 14, 2015, 3:08 AM by Uthayarajan Markandu

இலண்டனை சேர்ந்த திரு;ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது தாயான சீனிவாசகம் செல்லம்மா என்பவரின் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு 2015.12.13 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்கியுள்ளார். இவரும் இவரது குடும்பத்தவரும் சீரும் சிறப்பும் பெற்று  பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.


இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2015/07/10

posted Jul 10, 2015, 6:40 PM by Uthayarajan Markandu   [ updated Jul 10, 2015, 6:41 PM ]

இலண்டனை சேர்ந்த திரு;ஆர்.எஸ். கனகராஜாஎன்பவர் தனது 66 வது பிறந்த நாளை முன்னிட்டு 2015.07.10 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்கினார். இவரும் இவரது குடும்பத்தவரும் சீரும் சிறப்பும் பெற்று  பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.





இல்ல சிறார்களுக்கு உதவி

posted May 25, 2015, 1:41 AM by Uthayarajan Markandu

இலண்டனை சேர்ந்த திருமதி மங்கயகரசி கனகசபாபதி என்பவர் தனது பேரனான ஜெயானந்தன் காறுனியன் என்பாவரின் இறந்த தினத்தை முன்னிட்டு 2015.05.12 அன்று உணவு வழங்க பணஉதவி புரிந்தார். இவரின் ஆத்மா சாந்தியடைய இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.







இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2015/03/23

posted Mar 27, 2015, 8:48 AM by Uthayarajan Markandu

இலண்டனை சேர்ந்த திருமதி தமிழ்பிரியா சுதாகரன் என்பவர் தனது மாமியாரான அமரத்துவம் அடைந்த அழகையா தவமணி என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (2015.03.23) இல்லசிறார்களுக்கு உணவு வழங்கினார்கள் இவரின் ஆத்மா சாந்தியடைய இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.





வீரமுனை குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் குருபூசை தினம்

posted Mar 13, 2015, 2:10 AM by Uthayarajan Markandu

 
திருக்குறள் மூலம் வாழ்வின் இரகசியங்களை எமக்கு தந்த திருவள்ளுவரின் குரு பூசை தினம் இன்றாகும். இதனையொட்டி இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வீரமுனை குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.03.2015) காலை 8.00 மணிக்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திரு.தா.விநாயகமூர்த்தி (பொறியிலாளர்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச இந்துக்கலாசார உத்தியோகத்தர் திருமதி.சிவலோஜினி, திரு.s.சிவசுந்தரமூர்த்தி (அறநெறி பாடசாலை ஆலோசகர்-ISA), அறநெறி அதிபர் ஆசிரிய மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்கள், நிருவாகசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து அறநெறி மாணவிகளினால் இறைவணக்கமும் அறநெறி கீதமும் இடம்பெற்றதுடன் சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்களினால் பஜனை மற்றும் திருவள்ளுவர் திருவடி பூசை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திரு.தா.விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையுரையும், அறநெறி மாணவ மாணவிகளின் பேச்சு, திருக்குறள் மனனம் இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை ஆலோசகர் s.சிவசுந்தரமூர்த்தி அவர்களின் சிறப்புரை, குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலை அதிபர் திருமதி. க.கஜேந்தினி அவர்களின் நன்றியுரை இடம்பெற்றதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது.

ஞானம் அறக்கட்டளை நிதியத்தினால் சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களுக்கு உதவி

posted Mar 2, 2015, 4:24 AM by Thambiaiyah Sathiyaraj   [ updated Mar 2, 2015, 4:24 AM ]

ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் 43 ஆவது பிறந்ததினமான இன்று(2) திங்கட்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது. இதனையொட்டி வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களுக்கு மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு மாதாந்தம் ஆயிரம் ரூபாய் நிதி கல்வி ஊக்குவிப்புக்காக வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.



இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா

posted Feb 9, 2015, 7:12 PM by Thambiaiyah Sathiyaraj   [ updated Feb 9, 2015, 7:13 PM ]

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா கடந்த 18/01/2015 அன்று இனிதே நடைபெற்றது. இந்த மகிழ்ச்சிகரமான சுற்றுலாவில் இல்லச்சிறார்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நிருவாக உறுப்பினர்கள், இல்லப்பாதுகாவலர் போன்றோர் பங்கேற்றனர். மேலும் மாணவர்களது போஷாக்கினை பேணும் பொருட்டு இந்த சுற்றுலாவின்போது போஷாக்கான மாமிச உணவுகள் மிகவும் ருசியான வகையில் சமைத்து வழங்கப்பட்டது.






இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கியது- 2014.12.13

posted Dec 13, 2014, 12:36 AM by Uthayarajan Markandu   [ updated Dec 13, 2014, 12:38 AM ]

இலண்டனில் வசிக்கும் திரு.ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது  தயான சீனிவாசகம் செல்லம்மாவின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2014/12/13 ம் திகதி இன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கினார் . இவரின் தாயார் சீரும் சிறப்பும் பெற்று  பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிருவாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.





இல்ல சிறார்களுக்கு உணவுக்கான நிதி அன்பளிப்பு.

posted Nov 20, 2014, 5:46 PM by Uthayarajan Markandu   [ updated Nov 20, 2014, 5:46 PM ]

2014.11.01 அன்று கனடாவில் வசிக்கும் திருமதி யாமினி சதீஸ் என்பவர் தனது தாயாரான திருமதி சிவமலர் நவரெத்தினம் என்பவரின் நினைவாக இல்லச் சிறார்களுக்கு உணவு வழங்க நிதியுதவி திரு .மு.விநாயகமூர்த்தி அவர்கள் மூலமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.(உணவு வழங்கியபோது)









1-10 of 44